ரிப்பன் பகோடா
தேவையான பொருட்கள்
இட்லி புழுங்கல் அரிசி 5 கப்
சிவப்பு மிளகாய் 30
பூண்டு 15 பல்
கடலைப்பருப்பு மாவு 2 கப்
பொட்டு கடலை மாவு 1/2 கப்
வெண்ணெய் 1 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
பொரித்தெடுக்க
கடலெண்ணெய் 1 லிட்டர்
செய்முறை
- அரிசியை நன்றாக களைந்து 4 மணி நேரம் ஊற விடவும்
- ஊறிய அரிசியுடன் மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்
- அரைத்த மாவுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு, பெருங்காயம் ,வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- வாணலியில் கடலை எண்ணையை விட்டு நன்றாக காய்ந்ததும் ரிப்பன் பகோடா அச்சில் பிழிந்து விடவும்.
- நன்றாக வெந்ததும் எடுத்து ஆற விடவும் .
சுவையான மொறு மொறுப்பான ரிப்பன் பகோடா தயார் .
பி.கு :
1. கிரைண்டரில் அரைக்கும் பொழுது தண்ணீர் தேவையான அளவு தாராளமாக சேர்த்து கொள்ளலாம் .
2. மாவு பிசையும் பொழுது அச்சில் பிழிய வருமளவு பதத்தில் பிசையவும்.
