Wednesday, 23 December 2015

அடை



தேவையான பொருட்கள் 

புழுங்கல் அரிசி  100கிராம்
பச்சரிசி  100 கிராம்                          
கடலைபருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு  50 கிராம்
உளுத்தம்பருப்பு 25 கிராம்

தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
பச்சை மிளகாய்  2
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை

புழுங்கல்  அரிசி மற்றும் பருப்பு வகைகளை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். .
அரைக்கும் பொழுது அத்துடன் சிவப்பு மிளகாய் , பச்சை மிளகாய், தேங்காய் பூவாக துருவியது , சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்  மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இட்லி மாவு பதத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும் .

மாவை  தோசைக் கல்லில் அடையாக ஊற்றி  சிறிது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு எடுக்கவும்

சுவையான அடை தயார் . 

No comments:

Post a Comment