தேவையான பொருட்கள்
பச்சரிசி 100 கிராம்
கடலைபருப்பு 50 கிராம்
துவரம்பருப்பு 50 கிராம்
உளுத்தம்பருப்பு 25 கிராம்
தேங்காய் அரை மூடி
சிவப்பு மிளகாய் 3
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை
புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். .
அரைக்கும் பொழுது அத்துடன் சிவப்பு மிளகாய் , பச்சை மிளகாய், தேங்காய் பூவாக துருவியது , சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இட்லி மாவு பதத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும் .
மாவை தோசைக் கல்லில் அடையாக ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு திருப்பி விட்டு எடுக்கவும்
சுவையான அடை தயார் .

No comments:
Post a Comment