Monday, 23 August 2021

SABUDHANA UPPUMA


ஜவ்வரசி உப்புமா

தேவையான பொருட்கள் 


நைலான் ஜவ்வரிசி 200 கிராம் 

பயத்தம் பருப்பு 50 கிராம் 

தேங்காய் துருவியது 1/2 கப்  

எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் 
தாளிக்க 

சீரகம்   1 டீ   ஸ்பூன்

பச்சை மிளகாய் 2 

சிவப்பு மிளகாய் 1

கறிவேப்பிலை ,

கொத்தமல்லி இலை  

உப்பு தேவையான அளவு 


தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்                         
செய்முறை

    ஊறவைத்த ஜவ்வரிசி 
  •  ஜவ்வரிசியை தண்ணீரில்  3-4 மணி நேரம் ஊறவைத்துக்  கொள்ளவும்.
  • பயத்தம்பருப்பை சிறிது நேரம் ஊற  வைத்து பின் அரை வேக்காடாக வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும் .
  • நான்ஸ்டிக் வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பெரிய விடவும் 
  • அத்துடன் வரமிளகாய்,  நறுக்கிய   பச்சைமிளகாய் ,   கறிவேப்பிலை சேர்த்து பின் ஊறியஜவ்வரிசி தண்ணீரை நன்றாக வடித்து சேர்த்து கிளறவும் .
  • 3-5 நிமிடங்களில் ஜவ்வரிசி பெரியதாக மற்றும் கண்ணாடி போல பள  பளப்பாக ஆகிவிடும்.
  • பின்பு வேக வைத்த பயத்தம் பருப்பு ,தேங்காய் பூ மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும் 
  • அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும் .
  • கொத்தமல்லி இலை பொடியாக்கி தூவி
         விடவும் .

சுவையான ஜவ்வரிசிஉப்புமா தயார் .

பி.கு :

1. நைலான்/கண்ணாடி ஜவ்வரிசி யில் செய்தால் மட்டுமே உதிர்  உதிராக வரும் .
2.ஜவ்வரிசி ஊற வைத்து கொண்டால் 10 நிமிடங்களில் செய்து விடலாம் .
3.இதற்கு சட்னி  எதுவும் தேவையில்லை .அற்புதமாக இருக்கும்.