ஜவ்வரசி உப்புமா
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி 200 கிராம்
பயத்தம் பருப்பு 50 கிராம்
தேங்காய் துருவியது 1/2 கப்
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
தாளிக்க
சீரகம் 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
சிவப்பு மிளகாய் 1
கறிவேப்பிலை ,
கொத்தமல்லி இலை
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஜவ்வரிசியை தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
- பயத்தம்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து பின் அரை வேக்காடாக வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும் .
- நான்ஸ்டிக் வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பெரிய விடவும்
- அத்துடன் வரமிளகாய், நறுக்கிய பச்சைமிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து பின் ஊறியஜவ்வரிசி தண்ணீரை நன்றாக வடித்து சேர்த்து கிளறவும் .
- 3-5 நிமிடங்களில் ஜவ்வரிசி பெரியதாக மற்றும் கண்ணாடி போல பள பளப்பாக ஆகிவிடும்.
- பின்பு வேக வைத்த பயத்தம் பருப்பு ,தேங்காய் பூ மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்
- அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும் .
- கொத்தமல்லி இலை பொடியாக்கி தூவி
![]() |
| ஊறவைத்த ஜவ்வரிசி |
சுவையான ஜவ்வரிசிஉப்புமா தயார் .
பி.கு :
1. நைலான்/கண்ணாடி ஜவ்வரிசி யில் செய்தால் மட்டுமே உதிர் உதிராக வரும் .
2.ஜவ்வரிசி ஊற வைத்து கொண்டால் 10 நிமிடங்களில் செய்து விடலாம் .
3.இதற்கு சட்னி எதுவும் தேவையில்லை .அற்புதமாக இருக்கும்.




No comments:
Post a Comment