துவரம் பருப்பு 50 கிராம்
கத்தரிக்காய் 100 கிராம்
முருங்கைக்காய் 1
உருளைக்கிழங்கு 100 கிராம்
காரட் 100 கிராம்
பீன்ஸ் 50 கிராம்
பட்டாணி 50 கிராம்
புளி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி சிறிது
நெய் 2 தேக்கரண்டி
அரைக்க
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 5
தனியா 1 தேக்கரண்டி
கொப்பரை/தேங்காய் துருவியது 2 மேஜைக்கரண்டி
தாளிக்க
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 1
மசாலா சாமான் : பிரிஞ்சி இலை ,பூ ,பட்டை ,லவங்கம் ,ஏலம்
பச்சை மிளகாய் 1
சாம்பார் வெங்காயம் 10கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை சிறிதளவு பொடியாக வெட்டியது
செய்முறை
1.துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
2.அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
3.பச்சரிசியை 4 பங்கு தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் வேக விடவும். பாதி வெந்த பின் கொடுத்துள்ள காய்களை சிறிய துண்டுகளாக்கி ஒன்றன் மேல் ஒன்றாக சேர்க்கவும் .
3/4 பதத்தில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும்
4.நன்றாக வெந்தபின், வேகவைத்த துவரம் பருப்பு மற்றும் அரைத்தவற்றை சேர்க்கவும்
5. சிறிது நல்லெண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து
சேர்க்கவும்
6. இறக்கிய பின் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்
சுவையான பிஸிபேளாபாத் தயார் .

No comments:
Post a Comment