தேவையான பொருட்கள்
பச்சரிசி 500 கிராம்
தேங்காய் 1 மூடி (திருகியது)
நெய் 4 தேக்கரண்டி
செய்முறை
1.அரிசியை களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும் .
2.அரிசியை தண்ணீரை வடித்து விட்டு சிறிது உலர விடவும்
3.மிக்ஸியில் ஈர அரிசி மாவாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
4.மாவை 1-2 டீஸ்பூன் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
5. அடி கனமான ,அகலமான பாத்திரத்தில் 500 மிலி தண்ணீர் வைத்து கொதி வந்தபின்
மாவை வடை போல தட்டி கொதிக்கும் நீரில் போடவும் .
6. 3-4 போட்டு அது வெந்து மேலே வந்த பிறகு இன்னும் 3 -4 தட்டி போடவும் . இதுவும் மேலே வந்த பிறகு 3-4 போடவும்.இது போல எல்லா மாவையும் வடை போல தட்டி போட்டு வேக விடவும்.
7.நன்றாக வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்
8.வடைகளை சல்லி கரண்டியால் தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்
9.கிண்ணத்தில் 2-3 எடுத்து அத்துடன் 1 டீஸ்பூன் நெய் மற்றும் தேங்காய் பூ சேர்த்து சூடாக சாப்பிடவும்.
சுவையான சத்தான நீர் கொழுக்கட்டை தயார் .
பி.கு
1. சளி,இருமலுக்கு சிறந்த மருந்து
2. உப்பு சேர்க்க தேவையில்லை
3.தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை தொட்டுக்கொள்ளலாம்
3.வடை/கொழுக்கட்டைகளை எடுத்த பின் உள்ள மாவு தண்ணீரை உப்பு/வெல்லம் போட்டு குடிக்கலாம்

No comments:
Post a Comment