Thursday, 13 May 2021

SABUDHANA BONDA

 

ஜவ்வரசி போண்டா 

 

தேவையான பொருட்கள் 


ஜவ்வரிசி 3/4 கப் 

புளித்த தயிர் 1 கப் 

தண்ணீர் 1/2 கப் 

சீரகம்   1 டீ   ஸ்பூன் 

நறுக்கிய வெங்காயம் 1/2 கப் 

மிளகாய் 2

கொத்தமல்லி இலை 2 டீ  ஸ்பூன்

இஞ்சி சிறிது 

அரிசி மாவு 1/4 கப் 

உப்பு தேவையான அளவு 


கடலை எண்ணை 200 கிராம் (பொரித்தெடுக்க) 

                               

செய்முறை

  • தண்ணீர் + புளித்த தயிருடன்  கெட்டியாக பெரிய உருண்டைகளாக உள்ள ஜவ்வரிசி சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்துக்  கொள்ளவும் .
  • ஊறிய ஜவ்வரிசியுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் ,மல்லி தழை ,இஞ்சி மற்றும் அரிசி மாவு,உப்பு சேர்த்து நீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும்.
  • தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்தது க்கொள்ளலாம் .
  • வாணலியில் கடலை  எண்ணெயை சூடு பண்ணவும் .
  • கலவையை சிறு உருண்டைகளாக்கி ,நன்கு சூடான எண்ணையில் போட்டு மிதமான தீயில் சிவக்க பொரித்து எடுக்கவும் 

சுவையான ஜவ்வரிசி போண்டா  தயார் .

பி.கு :


1. புளித்த தயிர் இல்லாவிட்டால் கலவையில் 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம் 

2.அதிகமாக நீர் சேர்த்து அதை சமன் செய்ய அரிசி மாவு சேர்த்தால் ருசி மாறிவிடும் 

3.இதற்கு காரச்சட்னி  தொட்டு சாப்பிடலாம்.அற்புதமாக இருக்கும்.


No comments:

Post a Comment