ஜவ்வரசி போண்டா
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி 3/4 கப்
புளித்த தயிர் 1 கப்
தண்ணீர் 1/2 கப்
சீரகம் 1 டீ ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
மிளகாய் 2
கொத்தமல்லி இலை 2 டீ ஸ்பூன்
இஞ்சி சிறிது
அரிசி மாவு 1/4 கப்
உப்பு தேவையான அளவு
கடலை எண்ணை 200 கிராம் (பொரித்தெடுக்க)
செய்முறை
- தண்ணீர் + புளித்த தயிருடன் கெட்டியாக பெரிய உருண்டைகளாக உள்ள ஜவ்வரிசி சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் .
- ஊறிய ஜவ்வரிசியுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் ,மல்லி தழை ,இஞ்சி மற்றும் அரிசி மாவு,உப்பு சேர்த்து நீர் சேர்க்காமல் கெட்டியாக பிசையவும்.
- தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்தது க்கொள்ளலாம் .
- வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .
- கலவையை சிறு உருண்டைகளாக்கி ,நன்கு சூடான எண்ணையில் போட்டு மிதமான தீயில் சிவக்க பொரித்து எடுக்கவும்
சுவையான ஜவ்வரிசி போண்டா தயார் .
பி.கு :
1. புளித்த தயிர் இல்லாவிட்டால் கலவையில் 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்
2.அதிகமாக நீர் சேர்த்து அதை சமன் செய்ய அரிசி மாவு சேர்த்தால் ருசி மாறிவிடும்
3.இதற்கு காரச்சட்னி தொட்டு சாப்பிடலாம்.அற்புதமாக இருக்கும்.

No comments:
Post a Comment