தேவையான பொருட்கள்
இனிப்பு
அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம்
நாட்டு சர்க்கரை 4 டீஸ்பூன்
தேங்காய் துருவியது 2 டீஸ்பூன்
ஏலக்காய் 2 பொடித்தது
நெய் 2 டீஸ்பூன்
காரம்
அணில் கேழ்வரகு சேமியா 100 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
காரட் 1 (துருவியது )
கறிவேப்பிலை
எண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 1
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1. அணில் சேமியா எல்லாவற்றையும் (100+100= 200 கிராம் ) துளியளவு உப்பு சேர்த்து ,
2 லிட்டர் தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற விடவும் .
பாதி அளவு மாவில் (100 கிராம்) தேங்காய் ,
நாட்டு சர்க்கரை,நெய் மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும் .
சுவையான இனிப்பு சேமியா தயார்
கார சேமியா
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை ,சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து அத்துடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். நன்கு வெங்காயம் வதங்கியதும் சிறிது உப்பு மற்றும் காரட் சேர்த்து கிளறி பின் வெந்த கேழ்வரகு சேமியாவை சேர்த்து கிளறி இறக்கி மூடி வைக்கவும் .
சுவையான கார சேமியா தயார்
பி.கு
1. சேமியாவை 5 நிமிடத்திற்கு மேல் தண்ணீரில் ஊற விட கூடாது.
அதிகம் ஊறினால் கூழ் போல ஆகிவிடும் .
2.அதிக எண்ணெய் இல்லாத சத்து மிக்க ஒரு உணவு .
3.உடனடியாக செய்யக்கூடியது
4.அனைவருக்கும் ஏற்ற காலை உணவு
5. மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவுக்கும் ஏற்றது .
6.கொத்தமல்லி இலை இருந்தால் பொடியாக வெட்டி கார சேமியாவில் கடைசியில் தூவி விடலாம்



No comments:
Post a Comment