தேவையான பொருட்கள்
சிவப்பு அவல்/வெள்ளை அவல் (கெட்டி)200 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
கேரட் 1
இஞ்சி சிறிது
மஞ்சள் பொடி சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் /கடலெண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 1
நிலக்கடலை வறுத்தது 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
1.அவல் -ஐ சுத்தம் செய்து ,தண்ணீரில் களைந்து எடுத்து சிறிது நீரில் 15 நிமிடம் நேரம் ஊற விடவும்.
2.பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி, இஞ்சியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்
3.வாணலியில் எண்ணெய் விட்டு மேலே கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து பின் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.சிறிது உப்பு துருவிய காரட் சேர்த்து வதக்கிய பின் ஊறிய அவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் .
5.கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டி மேலே தூவி விடவும்.
சுவையான சத்தான அவல் உப்புமா தயார் .
பி.கு
1.சிவப்பு அவல் அல்லது வெள்ளை அவல் -இல் செய்யலாம் .
2.தேவைப்பட்டால் தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடலாம்
3.காலை/இரவு உணவாகவோ மாலை சிற்றுண்டியாகவோ செய்யலாம்

No comments:
Post a Comment