தேவையான பொருட்கள்
(15-20 எண்ணிக்கை )
உளுத்தம்பருப்பு 150 கிராம்
பச்சை மிளகாய் 3
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 2
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
உப்பு சிறிதளவு
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
பொ ரித்தெடுக்க தேவையான கடலை எண்ணெய்
செய்முறை
1.உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
2.ஊறிய உளுத்தம் பருப்பு +பச்சை மிளகாய் மிக்ஸியில்/கிரைண்டரில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும் .
3. அரைத்து முடிக்கும் முன் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்
4.வெங்காயம் பொடியாக வெட்டிக்கொள்ளவும்
5.கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்
6..அரைத்து மாவுடன் வெங்காயம் ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி மற்றும் அரிசி மாவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
7. வாணலியில் கடலை எண்ணெயை சூடு பண்ணவும் .
8.மாவை சிறு உருண்டைகளாக்கி தட்டி பின் நடுவில் ஓட்டை போட்டு
எண்ணெயில் பொறித்து எடுக்கவும் .
சூடான சுவையான உளுத்தம்பருப்பு வடை தயார்
பி.கு
1.வெங்காயம் சேர்க்காமலும் வடை செய்யலாம்
2.சாம்பார் வடைக்கு வெங்காயம் சேர்க்காத வடையை சாம்பாரில் ஊற வைத்து சாப்பிடலாம்
3. மிக்ஸியில் அரைப்பதற்கு குளிர்ந்த நீரை பயன் படுத்திக்கொள்ளலாம் .மாவு சூடு ஏறி வடை சிவந்து போவதை தவிர்க்கலாம்

No comments:
Post a Comment