தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை 1 கட்டு
மிளகு 2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
செய்முறை
1.முருங்கைக்கீரையை ஆய்ந்து காம்புகள் இல்லாமல் இலைகளை எடுத்துக்கொள்ளவும் . சுத்தமாக 2 முறை அலசி தண்ணீரை வடிய விடவும்
2.சுத்தமான துணியில் நிழல் காய்ச்சலில் நன்றாக காய விடவும்.
3-4 நாட்களில் காய்ந்துவிடும்
3.முருங்கைக்கீரையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
4..வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை,கடலைப்பருப்பு,மிளகு மற்றும் சீரகத்தை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
5.அந்த சூட்டில் 2 மிளகாய் சேர்க்கவும்
5.எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடி செய்துபின் முருங்கைக்கீரை பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடி தயார் .
பி .கு
1.சாதத்திற்கு நெய்யுடன் போட்டு சாப்பிட அருமையான மற்றும் சத்தான பொடி
2. மிளகு மற்றும் சீரகம் வறுக்காமல் பச்சையாகவும் சேர்க்கலாம் .வறுத்து செய்தல் வாசனையாக இருக்கும்
3.பல வித சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்து வர இரத்தம் சுத்தி கரிக்கப்படும் .இரும்பு சத்து கிடைக்கும். பல விதமான நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.(For further details pl refer GOOGLE)